108 சிதறு தேங்காய், தங்கத்தேர், அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாடு.. களைகட்டிய இபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் !

 
அதிமுக

 தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தும், 108 தேங்காய் உடைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதிமுக

புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
 அந்த வகையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இபிஎஸ்  நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அத்துடன் கோவிலில்தங்கதேர் இழுத்து வழிபாடு செய்தனர்.  

அதிமுக
இதனை அடுத்து 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்த அதிமுகவினர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.  இந்த நிகழ்வில் அதிமுகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web