என்ன கொடுமை சரவணன் இது? காயத்திற்கு பெவிக்விக் போட்ட டாக்டர்!! அதிர்ந்த பெற்றோர்!!
சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடும் போது அடிக்கடி அடிபடுவதுண்டு. இவை சிறிய காயமாகவும் இருக்கலாம் , சில நேரங்களில் ஆழமாக அடிபட்டு பெரிய காயமாகிவிடுவதும் உண்டு. மருத்துவர்கள் காயத்தின் தன்மை, அளவு பொறுத்து சில நேரங்களில் ஆயின்மெண்ட் மட்டும் கொடுப்பார்கள். வலி நிவாரணி மாத்திரைகளை தருவர். ஆனால் காயம் ஆழமாக இருந்தால் தையல் போடுவதுண்டு. ஆனால் தெலங்கானாவில் கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரில் வசித்து வருபவர் வம்சி கிருஷ்ணா. இவர் தன்னுடைய 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானாவில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். திருமண நிகழ்வில் சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டது. உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு விட்டு, உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படும் ஃபெவிக்விக்கைத் தடவி விட்டார். இதனை கண்ட பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்யவே, நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினர் அங்குள்ள மருத்துவர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!