விரைவில் டாஸ்மாக் கடைகளில் ” கோதுமை பீர்”...மதுபானப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் பொழுதில் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இளசுகள் மாலை நேரங்களில் மாலுக்குள் அடைக்கலமாகின்றனர். மதுபானப் பிரியர்கள் ஜில் பீரை குடித்து வெயிலை தணித்து (?)வருகின்றனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது . இதுவரை தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது 1 லட்சம் பெட்டிகளை தாண்டியிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் விரைவில் 'டாஸ்மாக்' கடைகளில் 100% கோதுமை பீர் கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில், 35 வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிய வகை மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு வர மதுபானப் பிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட '100% வீட் பீர்' என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பிராண்ட் ஆன 'காப்டர்' தயாரிப்பில், 'செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்' வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த பீர் வகைகள், விரைவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வர உள்ளன.
'வீட்' பீர் விலை, ரூ190 மற்றும் காப்டர் வகை பீர்கள், ரூ160 - ரூ170 விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!