4 முனை போட்டி... விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு?
![விக்கிரவாண்டி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/05e1360ea6ce58e0db0f37eaaf05f7c7.png)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி ஏப்ரலில் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியாக இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. விக்ரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா இவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
அதனைப் போலவே புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் அதிமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முத்தமிழ் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பாஜக கூட்டணியில் உள்ள பாமக இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. அனைத்து கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க முழு உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!