ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு ஏன் அவசரம்?... உயர்நீதிமன்றம் கண்டனம்!

 
தவெக


திருப்புவனம்  மாவட்டத்தில் அஜீத் போலீஸ் காவலில் உயிரிழந்ததை கண்டித்து நாளை ஜூலை 5ம் தேதி  எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் தவெக போராட்டம் நடைபெற இருந்தது. அதே நாளில் ஏற்கனவே  அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால்,  ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டது.

உயர்நீதிமன்றம்

 இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.  அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும்.  போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
உங்களுக்கான வேலையை மட்டும்தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? ஆர்ப்பாட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பேற்பீர்களா? ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஒற்றுமைக்கு எதிராகவோ (அ) அரசியல் அமைப்பிற்கு எதிராகவோ பேசமாட்டோம் என உறுதி அளிப்பீர்களா? ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலோ (அ) முடிவிலோ கூட்டம் போன்ற நிகழ்வுகள் ஏதேனும் நடைபெறவுள்ளதா? என சராமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளது.

உயர்நீதிமன்றம்
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாட்கள் முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற  கால அவகாசத்தை சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது. அரசு வழக்கறிஞர் கூறியதை கேட்ட நீதிபதி, தவெக மனு அளித்த 1ம் தேதியை கணக்கில் கொண்டு 15 நாட்களுக்கு பிறகு ஆர்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?