மனைவி,மகள்கள் அனைவருக்கும் பாலியல் கொடுமை.. மாமியாரையும் விட்டு வைக்கல.. 20 ஆண்டுகளாக சைக்கோ நபர் செய்த கொடூரம்!

 
சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

பிரேசிலின் Novo Oriente நகரில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமானதில் இருந்து அந்த நபர் தனது மனைவியை வீட்டுக்காவலில் வைத்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மனைவியை அழைத்து சென்றார். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தெரியாது.

பாலியல்

வீட்டுக்காவலில் இருந்து தப்பிய மனைவி மற்றும் மகள்கள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த புகாரில், எங்களுக்கு திருமணமாகி, 3 முதல் 22 வயதுக்குள் ஏழு குழந்தைகள் உள்ளனர்.அவர்கள் குளித்து, ஆடை அணிவதை பார்க்க, என் கணவர் வீட்டின் சுவர்களில் ஓட்டை போட்டுள்ளார். அவர் 20 ஆண்டுகளாக எனது 3 வயது மகள் உட்பட எனது தாயை பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்.

அமெரிக்கா போலீஸ்

இதற்கு முன், வீட்டுக்காவலில் இருந்த எனது தாயும் அந்த நபரால் சித்திரவதை செய்யப்பட்டு உடல் நலக்குறைவால் இறந்தார்.  என் கணவருக்கு என் மகள் தான் தூக்க மாத்திரைகள் கொடுத்து மயக்கமடை செய்த பின் தான் நாங்கள் புகார் அளிக்க தப்பித்து வந்தோம். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார், மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!