கணவன் சமோசா வாங்கி திரும்பி வருவதற்குள் மனைவி தூக்கிட்டு தற்கொலை... பெரும் சோகம்!
![சமோசா தற்கொலை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/2487a934963b0aebb55adc56bb953045.png)
உத்திரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசித்து வருபவர் சோட்டு. இவரது மனைவி அஞ்சலி. இதில் சோட்டு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இது குறித்து கணவன் மனைவிக்கு இடையே தினம் சண்டை, தகராறு தான். இந்த தகராறு அதிகரித்து கைகலப்பில் முடிந்துள்ளது. ஜூன் 9ம் தேதி கணவரை அஞ்சலி சமோசா வாங்கி வர சொல்லி உள்ளார்.
சமோசா வாங்கச்சென்ற கணவர் வீடு திரும்பி .பார்த்தபோது அஞ்சலி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி அஞ்சலியின் மரணத்தை தாங்க முடியாத சோட்டு தன்னுடைய குடும்பத்தினருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு சோட்டுவும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!