அடுத்தடுத்து விபரீதம்... உலக்கையால் அடித்து மனைவி கொலை ... கணவன் விஷம் குடித்து தற்கொலை!

 
கருப்பசாமி - சீதாலட்சுமி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கீழ திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (60). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி சீதாலட்சுமி (57). கூலித் தொழிலாளியான இவர்களுக்கு அழகர்சாமி, அய்யனார், சமுத்திரக்கனி என்ற 3 மகன்களும், காமாட்சி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் சென்னையில் வசிக்கிறார்.இதனால் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையால் மனைவி சீதாலட்சுமியின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்து மனைவியை அடித்துக் கொன்ற குற்ற உணர்ச்சியில் கருப்பசாமி விவசாய பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார்.

நேற்று காலை தெருவுக்கு குடிநீர் வந்தது. நீண்ட நேரமாகியும் சீதாலட்சுமி தண்ணீர் எடுக்க வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்தனர். அப்போது பூச்சி மருந்து வாசனை வந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில், கொலைக்கு பயன்படுத்திய உலக்கை ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கருப்பசாமி விஷம் குடித்து உயிருக்கு போராடியதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி சுதிர், திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய கருப்பசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி இறந்தார். போலீசார் சீதாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web