கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி.. கோபத்தில் மாமியாரை கொடூரமாக குத்திக்கொன்ற இளைஞர்!
![கொலை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/16326f797dde997755c27e5ca3f391e0.jpg)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சி, வெண்பாக்கத்தை அடுத்த பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 40). இவரது மகள் சௌமியா (22). இவருக்கும், கும்மிடிப்பூண்டி ஆராம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விவேக் (32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக கணவர் விவேக்கிடம் இருந்து பிரிந்து கடந்த ஒரு வருடமாக சௌமியா தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே சௌமியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. அம்மா லதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சௌமியா வேறு ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி அந்த நபருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த விவேக் நேற்று இரவு மாமியார் லதா வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றியதில் விவேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் லதா மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாமியாரை கொலை செய்த விவேக் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!