வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி.. விரக்தியில் இரு குழந்தைகளுடன் கணவர் தற்கொலை!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த பணகுடி அண்ணாநகர் பகுதியில் ரமேஷ் (41) என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், மனைவி உமா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரமேஷின் மனைவி வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து கடனை அடைக்க முடியாமல் ரமேஷ் திணறி வந்ததாகவும், மனைவியை பிரிந்த வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று ரமேஷ் தனது குழந்தைகள் ராபின் (14), காவ்யா (11) ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேரின் உடலையும் பார்த்து பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த பணகுடி போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!