பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை!

 
சோனியா

கடலூர் நெல்லிக்குப்பம்  கொங்கராயனூரில் வசித்து வருபவர் 26 வயது சோனியா. இவர்  சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை  முகிலனும்  காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள்.  கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் . மகளும் முகிலனுடன்  இருந்தாள். 

சோனியா

கடந்த சில நாட்களுக்கு முன் சோனியா  தனது சொந்த ஊரான கொங்கராயனூருக்கு வந்தார். பின்னர் 4 நாட்களுக்கு முன்பு முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளை பார்க்க வேண்டும் என கூறினார். இதையடுத்து முகிலன், சோனியா ஆகியோர் தங்கள் மகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். 
ஜூலை 1ம் தேதி காலை சோனியா, முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதை கேட்டு பதறிய முகிலன், உறவினர்களுடன்  விரைந்து வந்து சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சோனியா தனது கையால் எழுதிய கடிதத்தை செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ்-அப் மூலம் கணவர் முகிலனுக்கு அனுப்பியிருந்தார்.  அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்த எனக்கு, அங்குள்ள ஒரு போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதில், நான் 3 மாத கர்ப்பமானேன்.

சோனியா
அந்த குறிப்பிட்ட நபர்  நான் கர்ப்பத்தை கலைக்க வேண்டும்.  கணவர் முகிலனிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும்  கர்ப்பத்தை கலைத்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து  புகார் அளித்தபோது, உயரதிகாரிகள் என்னை மட்டுமே  விசாரணை செய்தனர் அதிகளவில் பணிச்சுமை வழங்கினர். இந்நிலையில் எனது கர்ப்பம் தானாகவே திடீரென கலைந்துவிட்டது. இதனால் விடுமுறையில் வீட்டுக்கு வந்த நான், அந்த போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால் மனஉளைச்சலில் இருந்து வந்தேன். எனது சாவுக்கு காரணம் அந்த போலீஸ்காரர் மட்டுமே. இதில் எனது குடும்பத்தினர், கணவர் மற்றும் மகள் யாரையும் விசாரிக்க வேண்டாம். இதுவே எனது மரண வாக்குமூலம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து முகிலன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சோனியாவின் கள்ளக்காதலன்  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிபாளையம்  மாரியப்பன் மகன் ராஜீ (28) மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?