சென்னையில் குக்கர் வெடித்து பெண் பலியான பரிதாபம்!
சென்னையில் குக்கர் வெடித்து பெண் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி(55). இவர் இன்று தனது வீட்டில் குக்கரில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்தது. வெடித்த வேகத்தில் குக்கரின் மேல் மூடி ராஜலெட்சுமியின் தலையில் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த ராஜலெட்சுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ராஜலெட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
