கொடுத்த கடனை திருப்பி கேட்க சென்ற பெண் கொடூர கொலை.. அதிரவைக்கும் பின்னணி!

 
சுனந்தம்மா

கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டம், கனகபுரா தாலுக்கா சீனிவாசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனந்தம்மா (55). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் (43) என்பவர் ஓராண்டுக்கு முன் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் ஓராண்டு கடந்தும் பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இதனால் ரவிக்குமாரிடம் வாங்கிய பணத்தை தருமாறு சுனந்தம்மா வற்புறுத்தி வந்துள்ளார்.

கடன்

பணத்தை வட்டியுடன் தருவதாகவும், நான் சொல்லும் இடத்திற்கு நீங்கள் வாருங்கள் என்றும் ரவிக்குமார் சுனந்தம்மாவை அழைத்தார். இதை நம்பிய சுனந்தம்மா நேற்று முன்தினம் கொல்லஹள்ளிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் சுனந்தம்மாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சுனந்தம்மாவின் கணவர் தனது மனைவியை காணவில்லை என கனகபுரா கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு போலீசார் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து சுனந்தம்மாவை தேடி வந்தனர். ஆனால் அவரைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேச நாயக்கர் என்பவரது தோட்டத்தில் ஊழியர்கள் சானகே, சாலகே ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

தோட்டம் அமைப்பதற்காக மண்ணைத் தோண்டும்போது சேலை  ஒன்று இருந்ததை கண்டனர். இதனால் அந்த இடத்தை தோண்டியபோது சுனந்தம்மாவின் உடல் அங்கிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சுனந்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

விசாரணையில், கடனை அடைக்க சுனந்தம்மாவை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவரை அடித்துக் கொன்று, வெங்கடேச நாயக்கர் தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ரவிக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web