பெண்கள் சுமந்து வந்த அம்மன் பல்லக்கு!

 
அம்மன்
 


கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளி, பௌர்ணமி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படும். அந்த வகையில் ஆடிவெள்ளி பூஜை, பெளர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி விரத பூஜைகள் நடைபெற்றது.


அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 108 பெண்கள், குழந்தைகள் கலந்துக்கொண்ட திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டவர்களுக்கு அம்மன் படம், மஞ்சள் கொம்பு, மஞ்சள் சரடு, பச்சரிசி, சீப்பு - கண்ணாடி, வளையல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், தலைவாழை இலை, சாத்துக்குடி, பச்சைமாவு, குங்குமம் - மஞ்சள், ஜவ்வாது திருநீர், துணிப்பை, மல்லிப்பூ, தீப்பட்டி, விளக்கு திரி, செக்கு நல்லெண்ணெய், சர்க்கரை பொங்கல்  வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு  மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் தலைமையில் பெண்கள் விளக்கு ஏற்றிவைத்து பூஜைகள் செய்தனர். அதன்பின் பல்லக்கில் கன்னி பெண்கள் அம்மனை அழைத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். பெளர்ணமி பூஜையில் பூசாரி வாயில் துணி கட்டி மாப்பிள்ளை விநாயகர், தல விருட்சமான வில்வமரம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

 அதன் பின் கண்ணாடியில் பார்த்து நிலவுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு அம்மன் படத்துடன் மஞ்சள் சரடு  உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை கோவில் மூலஸ்தான குழு மற்றும் பெளர்ணமி குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?