என் கிட்ட பேச மாட்டியா? திருமணமான பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்!

 
அஜித்குமார்

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த குமார் மகள் இந்துமதி, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனுமுத்து மகன் அஜித்குமாரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்தது.  இதையடுத்து மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துமதியின் பெற்றோர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். கார்த்திக் மற்றும் இந்துமதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே இந்துமதிக்கும், அவரது கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்துமதி வாணியம்பாடியை விட்டு வெளியேறி திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் இந்துமதி, அஜித்குமார் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்த போது திடீரென இந்துமதி, அஜித்குமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த அஜித்குமார் சமீபத்தில் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டினார். அப்போது அந்த வழியாக இந்துமதி வந்துள்ளார். இதை பார்த்த அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசினார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏன் பேச மாட்ற என்று கோபமாக கேட்ட அஜித்குமார்.. திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலமுறை தாக்கினார்.

கத்தியால் பலத்த காயம் அடைந்த இந்துமதியை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த அஜித்குமார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web