ஐடியில் வேலை... ப்ரெண்ட்ஸுக்கு மது விருந்து கொடுத்த இளம்பெண்... கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

சமீப காலங்களாக உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நண்பர்கள், உறவினர், ஆசிரியர் என்று எந்த பேதமும் இல்லாமல் வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் நிறைந்த சமூகமாக காட்சியளிக்கிறது. தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள, ஐடியில் வேலை கிடைத்த சந்தோஷத்தில் ட்ரீட் கொடுத்த இளம்பெண், அந்த நண்பர்களாலேயே கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததற்காக இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களை தொடர்பு கொண்டு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இவருடன் 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் இருவர் பிரபல தனியார் ஓட்டலுக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்காக இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் உறவினருக்கு திங்கள்கிழமை இரவு வனஸ்தலிபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் ட்ரீட் கொடுத்துள்ளார். மூவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஓட்டல் அறையில் இருந்து அண்ணனிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நண்பர்களை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!