உஷார்... பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட்! வாரம் முழுவதும் கனமழை எச்சரிக்கை! எப்படி எதிர்கொள்வது?

இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை முடிவுக்கு வந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அந்த வகையில் மே 16 முதல் பெங்களூருவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெங்களூருவுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Yellow alert issued by IMD for many parts of South Interior Karnataka (SIK), North Interior Karnataka (NIK) and Coastal Karnataka.
— Bengaluru Weatherman (@Nammahavamana) May 14, 2024
Forecast - Heavy Rain,Thunderstorm/Lightning and strong gusty winds till 17th of May is possible in there parts of Karnataka. pic.twitter.com/ZnSKYCd4sN
அதன்படி பெங்களூருவில், மே 16 முதல் மே 21 வரை வாரம் முழுவதும் மழை பெய்யும். மே 16, 17 மற்றும் 19 தேதிகளில் தொடர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அத்துடன் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மே 18 அன்று, வானம் பொதுவாக லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மே 20 மற்றும் 21 தேதிகளில், மழை அல்லது இடியுடன் கூடிய வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இந்த காலம் முழுவதும் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அத்துடன் பொதுமக்களுக்கு மழையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் மழையை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் வீடுகளில் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். கடந்த முறை பெங்களூருவின் மரங்கள் நிறைந்த தெருக்களில் கடும் புயல் காரணமாக ஒரே நாளில் 270 மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கிளைகள் முறிந்தன.
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்கவும், பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் அவைகளை உடனடியாக சீரமைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் வாரம் முழுவதும் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு மக்கள் தேவையான நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
வானிலை மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ள IMD போன்ற நம்பகமான ஆதாரங்களில் இருந்து எச்சரிக்கைகளை தொடருங்கள். திடீர் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அல்லது சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டால், கெட்டுப்போகாத உணவு, குடிநீர் மற்றும் அவசரகாலப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வெளியில் பொருட்களைப் பாதுகாக்கவும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும். வீட்டிற்குள் மழை நீர் கசிவுகள் இருந்தால் கவனமாக இருக்கவும். கனமழையின் போது தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். அவசியமான காரணமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்க சாலையின் நிலைமைகளைப் புதுப்பித்த நிலையில் இருங்கள். முதலுதவி பொருட்கள், மின்விளக்குகள், பேட்டரிகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் அத்தியாவசியப் பொருட்களுடன் அவசரகாலப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். தகவல் தொடர்பு சாதனங்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். கனமழையின் போது தேவைப்பட்டால் உதவிகளை வழங்கவும் பெறவும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் எப்போதும் இணைப்பில் இருங்கள் எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!