நீ வேற சாதி.. கல்யாணம் வேணாம்.. காதலன் வார்த்தையால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு!

 
புஷ்பா - கிரண்

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் கிரண். கலபுர்கியின் புறநகர் பகுதியில் உள்ள யாலாலிங் காலனியை சேர்ந்தவர் புஷ்பா. யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கிரணும், புஷ்பாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். புஷ்பா வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், அந்த இளைஞனின் காதலை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. இருப்பினும், கிரண் புஷ்பாவுடன் பழகி வந்துள்ளார்.

பள்ளி காதல்

கடந்த சில நாட்களாக கிரணை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பா வற்புறுத்தி வந்தார். சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,  திருமணம் செய்ய வேண்டாம் என கிரண் கூறியுள்ளார். இந்நிலையில் புஷ்பா கிரணை சந்தித்து மீண்டும் திருமணம் செய்ய வலியுறுத்தினார். ஆனால் கிரண் மீண்டும் சாதி பிரச்னையை கிளப்பியுள்ளார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த புஷ்பா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து புஷ்பாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புஷ்பா தற்கொலை விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாதி காரணத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலபுர்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web