ஜூன்20 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்!!
தேர்வு முடிவுகளை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.மொத்தமாக 94.03 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38 % தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி. விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதில் தமிழகம் முழுவதும் 326 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19ம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்