திருநங்கைக்கு கல்லூரியில் இடம் தர முடியாது.. . பள்ளி மாணவி வேதனை!
![அஜிதா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/64f4c017cbe6bd714f0293b6108fec1b.png)
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்திருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை அஜிதா, நடைபெற்று முடிந்த 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 373 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
இவருக்கு பிஎஸ்சி உளவியல் பிரிவில் படிக்கச் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் பல்வேறு கல்லூரிகளில் வாய்ப்புகள் என்பது மறுக்கப்படுகின்றன.
கல்லூரிகளில் தனக்கான வாய்ப்புக்கேட்டு பெண்மணி சென்றால், அங்கு நீ திருநங்கை என்பதால் எந்த கழிவறையை பயன்படுத்துவாய்? பிற மாணவர்களுக்கு இது மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தி விடும்” எனக் கூறி வாய்ப்பு தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை கவுண்டர்மில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக மிகுந்த நன்றி எனவும் கூறியிருந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!