நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்... பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி? பாலபாடம் இது தாங்க!

 
ஷேர் மார்க்கெட் முதலீடு எப்படி செய்வது

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய் எனும் சொலவடை வழக்கத்தில் இருப்பது போல பங்குச் சந்தைகளில் எப்படிப்பட்ட பங்குகளை தேர்தெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக தெரிந்து கொண்டால் உங்களின் முதலீடு மோசமாகாதுங்க…

ப்ரீத்திக்கு நான் கியாரண்டி என்பது போல.. முதலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கண்ணில் தென்படும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்வீர்கள்?  பல் துலக்குவீர்கள்... அதற்கு என்ன தேவைப்படும்? பேஸ்ட்  மற்றும் பிரஷ். ஓகேவா? அதன் பின் காஃபியோ தேநீரோ பருகுவீர்கள் அல்லவா? அதற்கு பயன்படுத்தும் பொருட்கள்... அதன் பின்னர் நாளிதழை கையில் எடுப்பீர்கள். ஒரு குளியல் போட சோப்பை எடுப்பீர்கள்... இப்படி காலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தை பட்டியல் இடுங்கள்.

அடுத்ததாக உடுத்தும் உடை... அலுவலகம்  செல்ல எந்த வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் கண்களில் தென்படும் வாகனங்கள் எவை எவை? என கணக்கில் கொள்ளுங்கள். அலுவலகத்தில் பணியாற்றுகிறீர்கள் அல்லவா? அங்கே பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்னென்ன என கணக்கில் கொள்ளுங்கள். மாதா மாதம் சம்பளம் வருகிறதல்லவா? அப்படினா எந்த வங்கின்னு பாருங்கள். இப்படி பட்டியல் இட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவங்களில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக காசு பார்க்கலாம்

அடுத்ததாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் உங்களுக்கு தேவையில்லாத அதாவது உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.  உங்கள் முதலீடானது நீண்டகால அடிப்படையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும். டிரேடிங் என்பது கூடவே கூடாது. ஏனெனில் நமது நேரம் விரயமாவதுடன் மன உளைச்சலுக்கும் வழி வகுக்கும்.

ஷேர் மார்க்கெட் முதலீடு எப்படி செய்வது

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நூறு பன்றிகளை வளர்ப்பதை விட ஒரே ஒரு யானையை கட்டி தீனி போடுவது மேல் என்பதைப் போல உங்கள் போர்ட்போலியோவில் மிகச் சிறந்த பங்குகளை தொடர்ந்து வாங்கிச் சேர்ப்பது தான். வாங்கி வைத்திருக்கும் ஷேர்கள் பத்தே பத்தாக இருந்தாலும் அது தான் உங்களுக்கு கெத்து!

ஆக வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனம், மென் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், வங்கி ஷேர்கள் என மொத்தம் இப்பொழுது உங்கள் கையில் நான்கு துறை பங்குகள் உள்ளன. அந்த நான்கு துறை பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே வாருங்கள்.

அதெல்லாம் சரிங்க எப்ப தான் வெளியே வருவது என தானே கேட்கிறீர்கள்? உங்கள் மகன் அல்லது மகளின் படிப்புச் செலவு அல்லது கல்யாண செலவு வரை எடுக்காதீர்கள். இந்த நான்கு துறையும் உலகம் உள்ளவரை உயிர்ப்புடனேயே இருக்கும். கையைக் கடிக்காது. பத்தாண்டுகள் கழித்து நீங்கள் உங்களையே பார்த்து மலைக்கப் பார்ப்பீர்கள்.

இந்திய பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்:

உங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு, வர்த்தகம் மற்றும் டிமேட் கணக்கு, கணினி/லேப்டாப்/மொபைல், அதற்கான இணைய இணைப்பு முதலில் முக்கியம் அடுத்ததாக பான் கார்டு, ஆதார் அட்டை (முகவரிச் சான்றுக்காக) ஒரே ஒரு ரத்து செய்யப்பட்ட காசோலை/வங்கி அறிக்கை/பாஸ்புக், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், எந்த ஒரு இந்திய வங்கியிலும் உங்கள் சேமிப்புக் கணக்கை நீங்கள் வைத்திருக்கலாம். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால், விரைவில் விண்ணப்பிக்கவும்.

ஷேர் மார்க்கெட் லேப்டாப் சாப்ஃட்வேர்

நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் போது, ​​நிறைய கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நுழைகிறீர்கள். உங்கள் சேமிப்பை முதலீடு செய்து அதற்கு ஈடாக லட்சங்களை சம்பாதிக்க நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். பங்குச் சந்தையில் இருந்து செல்வம் ஈட்டியவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், இழந்தவர்களும் லட்சக்கணக்கில் உள்ளனர் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டு உலகில் முதன்முதலில் நுழையும் நபர்களுக்கான சில எச்சரிக்கை குறிப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் போன்ற அதிக வட்டி செலுத்தும் கடன்கள் உங்களிடம் இருந்தால், முதலில் அவற்றைச் செலுத்துங்கள். இந்த கடன்களின் வட்டி சந்தையில் இருந்து நீங்கள் பெறும் வருமானத்தைப் போலவே அதிகமாக இருக்கும்.

சந்தையில் இருந்து நீங்கள் சம்பாதித்த அனைத்து வருமானத்தையும் உங்கள் கடனுக்கான வட்டியாக கொடுக்க உங்கள் சக்தியை வீணாக்குவதில் அர்த்தமில்லை. சந்தையில் நுழைவதற்கு முன் இந்த கடன்களை முதலில் செலுத்துங்கள். உங்கள் கூடுதல்/உபரி நிதியை மட்டுமே முதலீடு செய்யுங்கள். உங்கள் அடுத்த செமஸ்டரின் கல்விக் கட்டணம், அடுத்த மாத வாடகை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உங்கள் மகளின் திருமணத்திற்கான சேமிப்பு அல்லது இது போன்ற ஏதேனும் காரணங்களை முன்னிட்டு நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் இங்கே முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.

ஏனெனில் இங்கே லாபம் கிடைக்க சிறிது காலம் ஆகலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத தொகையை மட்டும் முதலீடு செய்யுங்கள்.  எப்பொழுதும்  கையில் கொஞ்சம் பணத்தை வைத்திருங்கள். கையில் உள்ள பணம் உங்கள் அவசர நிதியாக மட்டும் செயல்படாது. உங்கள் பணத்தை முழுவதுமாக முதலீடு செய்து விட்டால்  பின்னர்  நீங்கள் வாங்கிய நல்ல பங்கின் விலை குறைந்தால் உங்களிடம் ஆவரேஜ் செய்ய பணம் இருக்காது. ஆகவே கையில் பணம் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web