முதியவரை கொன்று எஸ்கேப் ஆன இளைஞர்.. அரை மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

 
 கருப்பையா - சக்தி கணேஷ்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (70). அவரது வீட்டில் சக்தி கணேஷ் (18) என்பவர் வசித்து வருகிறார். அவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும், அவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொலை

இந்த நிலையில், கருப்பையாவுக்கும் சக்தி கணேஷின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சக்தி கணேஷ் கருப்பையாவை கொடூரமாகத் தாக்கி கொலை செய்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். கருப்பையாவின் உடலை உடனடியாகக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், தப்பி ஓடிய இளைஞரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கொலையாளியை அரை மணி நேரத்தில் பிடித்ததற்காக காவல்துறையினரை மூத்த காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!