காதல் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் கூட ஆகல ... இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
சங்கர்
 

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு  கிராமத்தில் வசித்து வருபவர்  சங்கர் கணேஷ். இவர், கோமலா என்ற பெண்னை காதலித்து   திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாலும் குடும்ப கஷ்டத்தினாலும் கோமலா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
 
இதனையடுத்து வீட்டிலியே இருந்த சங்கர் கணேஷ், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், குடும்ப கஷ்டத்தினாலும், காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை

எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும். வாழ்க்கையே கஷ்டமாக இருப்பதால் இந்த முடிவை எடுப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவலின் பேரில் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!