கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

 
முதல்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தமிழக அரசு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கீழ் புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவர் நேற்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் மேற்படி கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது சகடையிலிருந்த குடை மின்கம்பியில் பட்டு அறுந்து கீழே விழுந்ததில் எதிர்பாராதவிதமாக கரகம் தூக்கிச் சென்ற மேற்குறிப்பிட்ட செந்தில்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கள்ளக்குறிச்சி

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?