சித்திரை திருவிழாவில் சோகம்!! இளைஞர் உயிரிழப்பு!! பரபரக்கும் மதுரை!!

 
கள்ளழகரை

உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கள்ளழகரை வழிபட்டனர். தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினர். இந்த திருவிழாவை பார்க்க வந்த மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) இளைஞர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கள்ளழகர்

ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரா? அல்லது கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

முன்னதாக நேற்று நள்ளிரவு சூர்யா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அதிகாலை 4 மணி அளவில் மதுரை ராமராயர் மண்டகப்படி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் அரிவாள்களுடன் வலம் வந்த இளைஞர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளழகர்

அப்போது அந்த இளைஞர்கள் சூர்யாவையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதானல் அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இளைஞர் உயிரிழப்பு கொலையா  அல்லது விபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web