பகீர்!! 9 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்த இளைஞர்!!
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் நிர்க்கதியாக உள்ளன. மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் இளையதலைமுறை வீக் எண்ட்டில் பார்ட்டி, கெட் டு கெதர் என சீரழிந்து வருகின்றனர். இளைஞர்கள் தொடங்கி தற்போது பள்ளி மாணவர்கள் வரை இந்த குடிபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் பிறகு மயக்கநிலையில் இருந்த சிறுவனை அள்ளி எடுத்துக் கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு ஓடினர். அத்துடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து வழக்கு பதிவு செய்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த இளைஞரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அறிவழகனை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அந்த சிறுவன் உடல் நலம் தேறிவருகிறார். சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்