அதிர்ச்சி... இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட இளைஞர்!

 
பேருந்து
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே  தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு  தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னாலேயே அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது, தாமரங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறுவதற்காக கையை காட்டி சாலையைக் கடக்கச் சென்றார்.

ஆம்புலன்ஸ்

 அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தவறான முறையில் தனியார் பேருந்தை முந்துவதற்கு  முயற்சி செய்துள்ளார். இதில் தனியார் பேருந்தில் ஏற முயற்சித்த இளைஞர் பரத் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டவர் அதிர்ஷ்டவசமாக  லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.  

உத்தரபிரதேச போலீஸ்

தனியார் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வேகமாக வந்து முந்த முயற்சித்ததால்  இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.  இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பும் விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி  காண்பவர்களை மிரள வைக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web