வெறுப்புக்கு எதிராக வாக்களித்து விட்டேன்... நீங்களும் ஓட்டுப்போடுங்க.. .பிரகாஷ்ராஜ் சர்ச்சை பேச்சு!
தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இன்று ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
#WATCH | Karnataka: Actor Prakash Raj casts his vote at a polling station in Bengaluru.
— ANI (@ANI) April 26, 2024
Karnataka is voting on 14 seats today in the second phase of Lok Sabha elections.#LokSabhaElections2024 pic.twitter.com/AzghrtGPPS
வாக்களித்த பிறகு பிரகாஷ்ராஜ் "வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது மிகவும் முக்கியமான விஷயம்; இந்த தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை முடிவு செய்பவர்கள்; உங்கள் தலைவரை, உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த சர்ச்சையான பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!