ஜனநாயகக் கடமையாற்றுங்கள்... தவெக தலைவர் விஜய் ட்வீட்!
மக்களவை தேர்தல் இன்று ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08%, குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 32.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் பெருங்கூட்டத்திற்கிடையே வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!