அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தலைநகரில் பிரம்மாண்ட ரோடுஷோ... தொண்டர்கள் உற்சாகம்!

 
கெஜ்ரிவால்

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.  இன்று அனுமன் கோவிலில் வழிபாடு செய்த பிறகு   டெல்லியில் மாபெரும் ரோடு ஷோ நடத்த இருக்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்கின்றனர்.  

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால்  மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து  நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா ஆகியோர் வரவேற்றனர்.  அப்போது " நான் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்று ஏற்கனவே கூறியிருந்த படி வந்து விட்டேன்.  கோடிக்கணக்கான மக்களின் ஆசியால் தான் இது நடந்துள்ளது.  அனைவருக்கும் நன்றி. உச்ச நீதிமன்றத்துக்கும் நன்றி" எனக் கூறினார்.  

அரவிந்த் கெஜ்ரிவால்


இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை தெற்கு டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்திக்கிறார்.   ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஜாமீன் கிடைத்ததை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாமாக கொண்டாடினர். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web