நாட்டுக்காக தன் தாலியை தியாகம் செய்தவர் என் தாய்... மோடியை எகிறி அடிக்கும் பிரியங்கா காந்தி!
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 6 கட்ட தேர்தலுக்காக தீவிர பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது .அந்த வகையில் கர்நாடகாவில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் " காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதில் 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது. உங்களின் 'தாலி' என்ற தங்கத்தை யாராவது பறித்தார்களா? போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்கு வழங்கினார். என் தாயும் அவர் தாலியை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார். பிரதமர் வரலாறு அறியாமல் பேசுகிறார்.மோடிக்கு பெண்களின் உணர்வுகளை பற்றி தெரிய வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பு காரணமாக பல்வேறு பெண்களின் தாலிகள் அடகு கடைகளில் இருந்ததை மறந்து விட்டு பேசுகிறார். அப்போது பல பெண்களின் திருமணங்கள் நகைகள் இல்லாததால் நின்று போனது; அந்த சமயத்தில் பிரதமர் எங்கு சென்றார்?. பிரதமர் மோடி கொச்சையான அரசியலை பேசி வருகிறார், மோடிக்கு தேர்தலில் பதிலடியை மகளிர் தருவார்கள்" என ஆவேசமாக பேசியுள்ளார்.
ஏப்ரல் 21ம் தேதி , ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் சொத்துகளும் கணக்கெடுக்கப்படும். தாய்மார்கள், சகோதரிகளுக்கு சொந்தமான தங்கத்தை கணக்கிட்டு பின்னர் அதை மறுவிநியோகம் செய்யும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் உங்கள் தாலியை கூட விடமாட்டார்கள்" எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் “பிரதமரின் இந்த பேச்சு தவறானது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு தகவலே இல்லை. தனது தாயின் தாலி இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!