நாளை கர்நாடகாவில் பிரதமர் மோடி 5வது முறையாக பிரச்சாரம்... முழு பயண விவரம்!

 
மோடி பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை ஏப்ரல் 28ம் தேதி கர்நாடகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வரும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மோடி
ஏற்கெனவே 4 முறை கர்நாடகாவில் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், நாளை மீண்டும் 5வது முறையாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார்.
நாளை மதியம் 1 மணியளவில் தாவண்கெரே தொகுதி பாஜக வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பாஜக வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

மோடி

அத்துடன் பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.நாளை மறுநாள் ஏப்ரல் 29 உத்தர கன்னடா மாவட்டம் வேட்பாளர் விக்னேஷ்வர் ஹெக்டே காகேரிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திரட்டுகிறார். அதன் பின்னர் மதியம் 1 மணி முதல் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் பெல்லாரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். அதன் பின்னர், பெல்லாரியில் இருந்து பாகல்கோட் செல்லும் மோடி, மதியம் 2 மணிக்கு பாகல்கோட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு செல்கிறார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web