நகரியில் நடிகை ரோஜாவுக்கு எதிர்ப்பு... வீட்டிற்குள் சென்று பூட்டிக்கொண்ட பொதுமக்கள்!
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஆந்திராவில் மே 13ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ரோஜா போட்டியிடுகிறார். நடிகை ரோஜா போட்டியிடும் இத்தொகுதி தமிழக-ஆந்திர மாநில எல்லையான சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் அதிகளவில் தமிழர்கள் தான் வசித்து வருகின்றனர்.அதிலும் அவர்களில் பெரும்பாலானோர் நெசவு தொழிலாளிகள்.

இவர் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேச கட்சியில் இருந்து விலகி காங்கிரசுக்கு மாறினார். அதன்பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்து தற்போது நகரி தொகுதி எம்எல்ஏ, சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார். 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த தொகுதியை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. நெசவு தொழிலாளர்கள் உள்ளதால் ஜவுளி பூங்கா அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் ஒன்றை கூட நடிகையும், அமைச்சருமான ரோஜா இதுவரை நிறைவேற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே போல் நெசவு தொழிலுக்கு இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தியதை தவிர வேறெதுவும் செய்யவில்லை என குமுறுகின்றனர். நகரியில் தொழில் வளர்ச்சி குன்றியதால் அங்கு வசித்து வந்த பலர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மே 13ம் தேதி நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு அமைச்சர் ரோஜா, பல இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியில் காலி பானுபிரகாஷ் போட்டியிடுகிறார். சொந்தக் கட்சிக்காரர்களே ரோஜாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ரோஜா தன்னந்தனியாளாக நின்று வாக்கு சேகரித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ரோஜா`என்னை எதிரியாக கருதாமல் சொந்த கட்சியினர் தேர்தல் வேலை செய்தால் ஹாட்ரிக் வெற்றி பெறுவேன். அவ்வாறு தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கினால் 30000 முதல் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேசியிருந்தார். இவரது பேச்சு சொந்தக் கட்சிக்க்குள் மூத்த தலைவர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் தேர்தல் பணியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் ரோஜாவின் வெற்றி கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனால் அவர் கடும் அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் ‘அமைச்சர் ரோஜாவுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர்களே எதிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 4 பிரிவாகிவிட்டது. கோஷ்டி பூசல்களால் ரோஜாவின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம். 2வது முறையாக வெற்றி பெற்றபிறகு சொந்த கட்சியினரை அவர் மதிக்கவில்லை. ரோஜாவின் சகோதரர்கள் தலையீடு அதிகம் உள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். நகரி தொகுதியில் உள்ள ஆளும் கட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் ரோஜாவுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்கின்றனர். இந்நிலையில் நடிகை ரோஜா பிரச்சாரத்திற்காக சென்ற போது வேமாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி “ எம்.எல்.ஏ. ரோஜா கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் கிராமத்திற்காக எதுவுமே செய்யவில்லை” என்கின்றனர். மக்களின் எதிர்ப்பை மீறி கிராமத்திற்கு சென்று ரோஜா பிரச்சாரம் செய்தார். பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் சென்று கதவுகளை பூட்டிக்கொண்டனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், கட்சியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
