தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்... வெறிச்சோடிய வாக்குச்சாவடி!

 
தேர்தல் புறக்கணிப்பு
 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் வடமதுரை, வடமதுரை பெரியகாலனி,எர்ணாகுப்பம், தந்தை பெரியார் நகர், காட்டுக்குள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில், வடமதுரை வருவாய் கிராமம் என்பதை எர்ணாகுப்பம் என்று வருவாய்த் துறையினர் தங்களது பதிவேட்டில் மாற்றினர்.

தேர்தல் புறக்கணிப்பு

இதனால் தந்தை பெரியார் நகர், வடமதுரை பெரிய காலனி, காட்டுக்குள்ளி ஆகிய கிராம மக்கள் தங்கள் கிராமத்தினருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதிலும், நிலம் வாங்குவது, விற்பதில், வேலை வாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்டவைகளைப் பெறும் போது இந்தப் பெயர் மாற்றத்தால் தங்களது பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு தேவையில்லாத சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இதனைக் கண்டித்து கடந்த மாதம் 3 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், வருவாய் துறையினர் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தாது, இது வரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று நடைபெற்று வரும் தேர்தலை மூன்று கிராம மக்களும் புறக்கணித்தனர். இசம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 கிராம மக்களும் ஒரே நேரத்தில் தேர்தலைப் புறக்கணித்ததால், வாக்குசாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web