மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா... குவியும் வாழ்த்துகள்!

 
நீரவ் சோப்ரா

நேற்று நடைப்பெற்ற ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், ஏஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 82.27 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அசத்தினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

நீரஜ்

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 82.27 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்து அசத்தினார்.

போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடிய நீரஜ் சோப்ரா, 3 சுற்றுகளுக்கு பின்னர் 2-வது இடம் பிடித்ததார். அதன்பின்னர் 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். இப்போட்டியில் டி.பி. மானு வெள்ளி பதக்கமும், உத்தம் பட்டீல் வெண்கல பதக்கமும் வென்றனர்.

நீரஜ்

ஒடிசாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ், மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் 4.05 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.மற்றொரு தமிழரான பரணிகா இளங்கோவன் 4 மீட்டருடன் வெள்ளி வென்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web