லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் முதலிடம், 4வது இடத்தில் லக்னோ.. மற்ற அணிகள் எந்தெந்த இடங்களில்?

 
கிரிக்கெட்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று தொடர்ந்து புள்ளிகளின் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுஇரண்டாவது இடத்தில் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணியும், அதே 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் லக்னோவும், 5வது இடத்தில் 10 புள்ளிகளுடன் டெல்லி அணி உள்ளது.

6வது இடத்தில் 8 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. 7வது இடத்தில் 8 புள்ளிகளுடன் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும், 8வது இடத்தில் அதே 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணியும், கடைசி இடத்தில் 6 புள்ளிகளுடன் மும்பை அணியும் உள்ளது.

17-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி , லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். தொடக்கத்தில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டி காக் 8 ரன்களிலும் , பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

RR vs LSG

தொடர்ந்து கே.எல்.ராகுல் , தீபக் ஹூடா இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட், போல்ட், அவேஷ் கான், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பட்லர் 34 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

RR vs LSG

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web