பரிதாபமாக வெளியேறியது இலங்கை... வங்கதேசம் அபார வெற்றி!

 
இலங்கை வங்காளதேசம் கிரிக்கெட்

நேற்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. முன்னதாக, மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டதற்கு முன்னால் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட் விளையாட்டு, ஜெண்டில்மேன் விளையாட்டு என்று கூறப்பட்ட காலங்கள் எல்லாம் மறைந்து போயிற்று என்று பலரும் இந்த முறையில், உலகக் கோப்பை போட்டியில் ஒருவர் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். 

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மெண்டிஸ் 19 ரன்னில் வெளியேற, நிதானமாக ஆடிய நிசங்கா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார். மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். எனவே அவர் டைம் அவுட் முறையில் அவுட் ஆனார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ். 

SL vs Ban

அதன் பிறகு களமிறங்கிய அசலாங்கா தனது பொறுப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். அவர் 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தனன்ஜெயா 34 ரன்களிலும், தீக்ஷனா 22 ரன்களிலும், துஷ்மந்தா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ரஜிதா, மதுஷங்கா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். 

SL vs Ban

பின்னர் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சகீப் அல் ஹசன் 82 ரன்களும், ஹூசைன் ஷாண்டோ 90 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷிபூர் ரஹிம் 10 ரன்களும், மஹமதுல்லா 22 ரன்களும், மெஹதி ஹசன் மிர்சா 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஷிருதய் 15 ரன்களும், ஹசன் ஷாகிப் 5 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா 3 விக்கெட்டுகளும், தீக்ஷனா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web