அதிர்ச்சி... பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி துடிதுடித்து பலியான சோகம்... கதறியழுத பெற்றோர்!

 
நவிஷ்கா

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  பாதுகாப்பு, காற்று மாசுபாடு காரணமாக தமிழகத்தில் காலை 6மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  ஆனாலும், இந்த உத்தரவு தமிழகம் முழுவதுமே காற்றில் பறக்கவிடப்பட்டது. கண்காணிக்க அமைக்கப்பட்ட போலீசார் குழுவும் பல இடங்களில் மெத்தனமாகவே இருந்தனர். சில இடங்களில் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நவிஷ்கா

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அருகில் நின்று கொண்டிருந்த 4 வயது குழந்தையின் மீது விழுந்து வெடித்ததில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாம்பாக்கத்தில், நேற்றைய தினம் தீபாவளியை முன்னிட்டு ரமேஷ் என்பவரும், அவரது உறவினர்களும் விதவிதமான பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து கொண்டிருக்கும்  போது  சிறுமி நவிஷ்கா, அதன் அருகே சென்று விட்டார். இதில், பட்டாசு சிறுமி நவிஷ்காவின் மீது விழுந்து வெடித்ததில், சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக உறவினர்கள், படுகாயம் அடைந்த நவிஷ்காவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில்,  வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பட்டாசு
சிறுமி நவிஷ்காவின் கை அருகே  பட்டாசு வெடித்ததில் சிறுமியின் கை சிதறியதாக தெரிகிறது. இதனால் நவிஷ்கா வலியில் அலறி துடித்தார். உடனடியாக அவரது பெற்றோரும், உறவினர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிக்சை பலனின்றி சிறுமி நவிஷ்கா உயிரிழந்தார். இதை அறிந்து சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம்  குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web