திரை உலகில் சோகம்... பிரபல நடிகர் கங்கா திடீர் மரணம்!

 
கங்கா

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1983 ம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கங்கா. அதன் பின்னர் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தனது தனித்தன்மை மிக்க நடிப்பால் தனக்கென்று தனித்த ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

கங்கா

சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி (1986) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  அண்மைக்காலமாக திரை வாய்ப்புகள் குறைந்த நிலையில்  சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.  திருமணம் செய்துகொள்ளாத இவர்  தனது சகோதரர்  குடும்பத்துடன்  வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு நேற்று நள்ளிரவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.  இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கங்காவின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web