மீண்டும் அதிர்ச்சி... ஒரே நாளில் 4,769 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
கொரோனா தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்!ஆய்வு முடிவுகள்

கொரோனாவுடன் இந்தியர்கள் வாழ பழகி கொண்டார்கள் என்று தான் உலகம் பிரமிப்புடன் நம்மைப் பார்க்கிறது. வருடங்கள் கடந்தோடினாலும், கொரோனா தொற்று இன்னமும் இருக்க தான் செய்கிறது. மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் கொரோனா தொற்றினால் 4,769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மொத்த அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.73 கோடியாக உயந்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

கொரோனா

இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக பிஏ4 மற்றும் பிஏ வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 69 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய கொரோனா

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரத்து 121 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 933 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66 கோடியே 91 லட்சத்து 57 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 69 லட்சத்து 34 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web