BREAKING!! தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்!!

 

தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன்  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் சென்னையில்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை காலமானார். இவருக்கு வயது 85. இவரது உயிரிழப்பால்  இலக்கியவாதிகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த  வேதனை அடைந்துள்ளனர்.  இவருக்கு 2010ல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சில நாட்களாக மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்தவர். மேலும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரிகளிலும் தமிழ் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.

 

இது தவிர தலைநகர் டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக மட்டுமின்றி அறிவிப்பாளராகவும் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு இலக்கிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள் , அரசியல்வாதிகள் பலரும் தமது இரங்கல் செய்தியை பதிவிட்டுவருகின்றனர்.

அய்யகோ! 
அறிஞர் அவ்வை நடராசன் மறைந்தாரே! 
தமிழ்ச்சங்கத்தின் ஏடொன்று எரிந்துபட்டதே 
அகிலம் தழுவி வீசிய தமிழ்த்தென்றல் 
தன் வீச்சையும் மூச்சையும் நிறுத்திவிட்டதே 
பட்டிமன்றம் பொட்டிழந்துவிட்டதே 
இனி என்னோடு தனித்தமிழில் உரையாட எவருளார்? 
பேசுதமிழ் உள்ளவரை 
உங்கள் பெருமை வாழும் பெருமை! என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!