உஷார்... மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை விட்டாலும் இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் தேங்கியிருக்கிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனால் பொதுமக்கள் எந்தவகையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், நோய்தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.
சுகாதாரமான குடிநீர் கிடைக்காத நிலைமைகளிலும் காலரா நோய் ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். காலரா பாதித்தவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருக்கும். உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து விடும். ஓஆர்எஸ் (ORS) எனப்படும் நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும்.
நன்றாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ளுதல், நன்றாக காய்ச்சிய நீரை மட்டும் குடித்தல் ஆகிய இரண்டு தான் இந்த நோயை தடுப்பதற்கான முக்கிய வழிமுறைகள். நீரை குளோரின் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். தேங்கியிருக்கும் நீரில் இருக்க வேண்டியவர்கள் எலி காய்ச்சலை தவிர்க்க கால்களிலும் கைகளிலும் உறைகள் அணிந்து கொள்ளலாம்" என்று தேசிய நோய் தடுப்பு மையம் தெரிவிக்கிறது.
மழைக்காலங்களில் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஏற்படக் கூடிய மற்றொரு நோய் டைஃபாய்டு. அதீத காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறி. தலைவலி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இதன் மற்ற அறிகுறிகளாகும். பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் கல்லீரலை பாதிக்கும். இதை குணப்படுத்த ஆண்டி பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மலத்தின் மூலம் பரவும் நோய் என்பதால் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சுகாதாரமான முறையில் கவனித்துக் கொள்வது அவசியமாகும். எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளுங்க.
மழைநீர் மற்றும் வெள்ள நீர்த் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். எனவே ஏடிஸ் கொசுக்களினால் ஏற்படும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா, அதோடு அனஃபலிஸ் கொசுவினால் பரவும் மலேரியா ஆகியவை ஏற்படக்கூடும். அதீத காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, கண்களுக்கு பின்னால் வலி, தடிப்புகள் ஆகியவை டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறிகளாகும். பல வைரஸ் நோய்களை எதிர்கொள்ள எப்படி நேரடி மருந்து கிடையாதோ அதேபோல டெங்கு நோய்க்கு அதை ஏற்படுத்தும் வைரஸை நேரடியாக தாக்கும் மருந்து கிடையாது.
எனவே சீரான நீர்சத்து வழங்குவதே இந்த நோய்க்கான பிரதான சிகிச்சையாகும். தொடர் வாந்தி, வாய் அல்லது மூக்கிலிருந்து ரத்தம், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அது சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகிடும் வாய்ப்புள்ளது. தற்போது பல இடங்களில் மழை நீரின் தேக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படும். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கி, தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், ஒன்றோடு ஒன்றாக இருப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து மற்றோரு குழந்தைக்கு எளிதாக தொற்று பரவுகிறது. மூக்கில் இருந்து நீர் வடிவது, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் எளிதாக ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட பருவகால காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரியவர்கள் காய்கறி சூப் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளுதல் நல்லது. தினசரி உணவில் சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள், தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சளி பிரச்னைகளை தடுக்கலாம்.
குழந்தைகள் நீர்ச்சத்தோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேன் கொடுப்பதால் சளி தொந்தரவுகளை குறைக்கலாம். சுகாதாரமான நீர், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நோய்கள் வருவதைத் தவிர்க்கும். வருமுன் காப்பதே நலம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!