பள்ளி ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து!! 8 சிறுமிகள் படுகாயம்!! கதறித் துடித்த பெற்றோர்!!
தமிழகத்தின் அண்டை மாநிலமாம் புதுச்சேரியில் கடற்கரை சாலையில் ஓய்ட் டவுன் பகுதியில் க்ளூனி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியில் வசித்து வரும் மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.புஸ்ஸி வீதியில் வந்த ஆட்டோவும் அரசு மருத்துவ மனையிலிருந்து எதிரே வந்த தனியார் பேருந்தும் ஒன்றுக்கொன்று திடீரென மோதின.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் நிக்கிஷா(10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறுமிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதனை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!