தாக்குதல் எதிரொலி... ஜம்மு - காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும், பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு, சம்பா, கதுவா, ரஜௌரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!