இன்று முதல் பொது இடங்களில், பள்ளி, கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்! புதுவையில் உத்தரவு!

 
மாஸ்க்

இன்று முதல் புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியையும் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன்; புதுச்சேரியில் சண்டே மார்க்கெட், கடற்கரை சாலை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் ஆகிய பொது இடங்களில் கட்டாயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.

தியேட்டர்

அதே போன்று பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுச்சேரியில் அரசு,தனியார் நிறுவன ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.கொரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் இவைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனாவுடன் இன்புளூயன்சாவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தியேட்டர்

இதனையடுத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உடன் வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் திரையரங்குகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web