சோகம்... வீட்டு வாசலில் 3 வயது சிறுமியை கடித்து குதறிய சிறுத்தை!

குஜராத் மாநிலத்தில் கீர் சோம்நாத் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியாக கிராமத்தில் பணிபுரிந்து வருபவர் ரமேஷ் சவ்தா. இவருக்கு 3 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அச்சிறுமி உணவு சாப்பிட்டு கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றிருந்தார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியை கடித்து இழுத்து கொண்டு சென்று விட்டது. அந்த சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றுவிட்டு வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உடலை வீசி விட்டு சென்று விட்டது. வெளியில் சென்ற சிறுமி மாயமானது குறித்து கவலையடைந்த பெற்றோர் இரவு முழுவதும் குழந்தையை தேடியுள்ளனர். காலையில் வீட்டின் அருகே சிறுமி சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து கதறித் துடித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!