புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்... மரத்தில் கார் மோதி 6 பேர் பலி!

 
விபத்து

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த 8 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுலா வாககட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த மரத்தின் மீது மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புத்தாண்டைக் கொண்டாட கொல்கத்தாவை சேர்ந்த 8 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது ஜார்க்கண்ட் சர்க்யூட் ஹவுஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது வாகனத்தை நிறுத்த ஓட்டுநர் முயற்சி செய்துள்ளார். இருந்த போதிலும் வாகனம் அங்கிருந்த மரத்தில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது.

மீட்பு நடவடிக்கை

அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. எஞ்சிய 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடச் சென்ற நிலையில் 6 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web