திருப்பதியில் ஜனவரி 24 முதல் 3 நாட்களுக்கு சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25-ம் தேதி ரத சப்தமி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் நடைபெற இருந்த அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரத சப்தமி தினத்தில் அதிகளவில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால், விழா ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக வழக்கமான சேவைகள் மற்றும் கட்டண தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 24 முதல் 26-ம் தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்களில் திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
