எனது நெருங்கிய நண்பர் விஜயகாந்த்... பிரதமர் மோடி இரங்கல்!
எனது நெருங்கிய நண்பர் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விஜயகாந்த்தின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார்.
Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu’s political… pic.twitter.com/di0ZUfUVWo
— Narendra Modi (@narendramodi) December 28, 2023
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் சினிமாவின் சகாப்தங்களில் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அரசியல் தலைவராக பொது சேவை மற்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனது நெருங்கிய நண்பராகவும் கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளையும் நினைவு கூறுகிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!