பொங்கலுக்கு ரொக்கம் ரூ.1000 முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, முந்திரி, முழுக்கரும்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம்பெறும். இத்துடன் ரூ1000 ரொக்கத்தொகை கடந்தாண்டு வழங்கப்பட்டது. இந்தாண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர்.
தமிழகத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், ரூ.1000 ரொக்கமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!